World News
ஆக் லேண்ட் (நியூசிலாந்து): நியூசிலாந்தின் ஆக்லேண்ட் நகரம் 2024 புத்தாண்டு வரவேற்கும் உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது. உயரமான கட்டிடமான ஸ்கை டவர், டவுன்டவுணில் இருந்து வெளிப்படும் வண்ண வான வேடிக்கைகளும் மக்களின் ஆராவாரங்களும் இதற்கு கட்டியம் கூறுகின்றன. உக்ரைன் மற்றும் காசா போர்ச்சூழல் பல்வேறு நகரங்களில் கொண்டாட்ட மனநிலையை முடக்கி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில புத்தாண்டுக்கு முந்தைய கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.