World News
இஸ்லமாபாத்: மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், அது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி, தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது மத்திய அரசு. அதனை எதிர்த்து பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமை அன்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் மத்திய அரசின் ஒருமனதாக உறுதி செய்தது நீதிமன்றம். இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment