World News
பெய்ஜிங்: கண் அறுவை சிகிச்சையின்போது வயதான நோயாளியை தலையில் தாக்கிய மருத்துவரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனாவில் கண் அறுவை சிகிச்சைக்காக 82 வயது பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிசிச்சைக்காக அவருக்கு மருத்துவர் குறிப்பிட்ட ஓரிடத்தை மட்டும் மரத்துப் போகச் செய்வதற்கான மயக்கமருந்தை செலுத்தியுள்ளார். அம்மூதாட்டிக்கு முழுமையாக மயக்கம் வராத நிலையில் அறுவை சிகிச்சையின் போது அவர் புலம்பியுள்ளார். அவரால் மருத்துவரின் எச்சரிக்கையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் மருத்துவர் அந்நோயளியை மூன்று முறை தலையில் தாக்கியுள்ளார். இவை அனைத்தும் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
Comments
Post a Comment