World News

புதுடெல்லி: கனடா வாழ் காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சர் பயங்கரவாதியாக அறிவித்தது.

33 வயதான லக்பீர் சிங் லண்டா தடை செய்யப்பட்ட காலிஸ்தானி இயக்கத்தின் பாபர் கல்சா இண்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்தவர். இவர் மொஹாலியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் காவல்துறை தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவராவார். அதேபோல் கடந்த டிசம்பர் 2022ல் சர்ஹாலி காவல்நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் இவருக்குத் தொடர்புள்ளதாகத் தெரிகிறது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News