World News
புதுடெல்லி: சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அக்‌ஷய் சின் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் இந்த வரைபடம் உள்ளடக்கி உள்ளது. இந்த தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது. அதோடு இந்திய நாட்டின் ஒரு பகுதியின் மீது சீனாவின் உரிமை கோரலை நிராகரித்தும் இருந்தது. இந்தியாவின் வழியில் சீனாவின் புதிய வரைபடத்தை பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் மற்றும் தைவான் நாட்டு அரசுகளும் நிராகரித்துள்ளன.