Sports in Tamil

கோபன்ஹேகன்: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி, ட்ரீசா ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் காயத்ரி, ட்ரீசா ஜோடி சீன தைபேவின் சாங் சிங் ஹுய், யங் சிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காயத்ரி, ட்ரீசா ஜோடி 21-18, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்த சுற்றில் இந்திய ஜோடி போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் ஷென் குயிங், ஜியா யி ஃபேன் ஜோடியை எதிர்கொள்கிறது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News