Sports in Tamil
பாகு: மன வலிமையில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா அரசுன் என்றும் கிளாசிக் போட்டியில் மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் வலிமையாக திகழ்வதாகவும் பாராட்டி உள்ளார் உலகக் கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றமுதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்.
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவை டைபிரேக்கர் சுற்றில் 1.5-0.5 என்ற கணக்கில் வென்று முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன். உலக செஸ் அரங்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தரவரிசையில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் கார்ல்சன், ஏற்கெனவே 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Comments
Post a Comment