World News
கோபன்ஹேகன்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்யும் வகையில் எஃப்-16 போர் விமானங்களை வழங்க டென்மார்க் மற்றும் நெதர்லாந்து முடிவு செய்துள்ளது. இதனை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கு 6 எஃப்-16 போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேலும் 8 போர் விமானங்கள் மற்றும் 2025-ல் 5 போர் விமானங்கள் என 19 எஃப்-16 போர் விமானங்களை வழங்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளனர். “சுதந்திரத்துக்காக போராடும் உக்ரைனுக்கு எங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக இதை வழங்குகிறோம். உக்ரைனுக்கு தேவை உள்ள வரை இந்த ஆதரவு தொடரும்” என மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment