World News
மாஸ்கோ: உக்ரைன் போர்க் கைதிகள் 65 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் அதில்இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
உக்ரைன் போரில் சிறைபிடிக்கபட்ட 65 கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான விமானம் மேற்கு பெல்கோரோட் பிராந்தியத்தில் (உக்ரைன் எல்லைப் பகுதி) திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானம் தீப்பற்றி எரிந்ததில் 65 உக்ரைன் கைதிகள், ஆறு விமான பணியாளர்கள், மூன்று பாதுகாப்பு படை வீரர்கள்உட்பட அனைவரும் உயிரிழந்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி பிராந்தியஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Comments
Post a Comment