World News

மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி ஏறத்தாழ கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது. ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை. இந்நிலையில், 65 உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. காலை 11 மணி அளவில் உக்ரைன் எல்லையோர நகரமான ரஷ்யாவின் பெல்க்ரோட் பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 65 போர்க் கைதிகளுடன் விமானத்தில் 6 பணியாளர்கள், 3 துணை ராணுவ வீரர்கள் பயணித்துள்ளதாக தெரிகிறது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News