World News
ஒட்டாவா: கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் இரண்டு வருடங்களாக கனடா அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது. இதனால், இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு நிலவுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், "கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி விசாக்கள் வழங்கப்பட்டன. 2023-ம் ஆண்டு கிட்டத்தட்ட 5.60 லட்சம் மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஏற்றுக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையைவிட இது மூன்று மடங்கு அதிகம்.
Comments
Post a Comment