World News

காசா: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த சண்டையில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1,140 பேரும், காசாவில் 24,620 பேரும் உயிரிழந்தனர்.

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்வதால், காசாவில் வசித்த 85 சதவீத மக்கள், அதாவது 24 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவில் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது. பலர் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு அவசர உதவி தேவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News