World News
தைபே: 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று புதிய அதிபராக லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது சீனாவுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இந்தத் தேர்தலை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தைவானில் 4 ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகின. இதனால், சர்வதேச அரசியல் பார்வை, தைவான் மீது திரும்பியது. சுமார் 19.5 மில்லியன் தைவான் மக்கள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். தற்போது தைவானின் புதிய அதிபராக லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்கான முடிவு, போருக்கான பாதை அல்லது அமைதிக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும் என்று சீனா நம்பியது. ஆனால், ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது சீனாவுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
Comments
Post a Comment