World News
மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக டவுன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கால்செரன் என்ற அந்தப் பெண்ணின் அரசியல் பிரவேசம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், கால்செரனின் இந்தப் பதவியேற்பு உலகம் முழுவதும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு கொண்டோர் மத்தியில் நேர்மறையான செய்தியைக் கடத்தியுள்ளதாகக் காணப்படுகிறது. அதுவும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு மிதமாக இருப்போருக்கு இது நம்பிக்கை செய்தியாக வந்துள்ளது. ஸ்பெயினில் மட்டுமல்ல, ஐரோப்பியாவிலேயே டவுன் சிண்ட்ரோம் பாதித்த பெண் ஒருவர் நாடாளுமன்ற பதவியில் அமர்வது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment