World News

புதுடெல்லி: மாலத்தீவில் மருத்துவ சிகிச்சைக்கான பயணத்துக்காக இந்தியா வழங்கிய டோனியர் விமானத்தை பயன்படுத்த அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்த நிலையில் அங்கு 14 வயது சிறுவன் ஒருவன் சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிழந்த சிறுவன் மூளைக் கட்டி மற்றும் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார். புதன்கிழமை இரவு சிறுவனுக்கு பக்கவாத பாதிப்பு தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் வசித்து வந்த தூரத்து தீவான வில்மிங்டனில் இருந்து சிகிச்சைக்காக தலைநகர் மாலேவுக்கு அவரைக் கொண்டு செல்ல குடும்பத்தினர் தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் சிறுவனை விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர் ஆனால் வியாழக்கிழமை காலை வரை அவர்களின் அழைப்புகளுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தீவிரமான 16 மணி நேர போராட்டங்களுக்குப் பின்னர் மாலத்தீவு விமான போக்குவரத்து அதிகாரிகள் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு பதில் அளித்தனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News