World News

வாஷிங்டன்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடைபெற்ற 'ஏபிஇசி' (APEC Summit ) பொருளாதார உச்சி நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் முக்கிய உலகளாவிய பிரச்சினைகளான ஈரான், மத்திய கிழக்கு, உக்ரைன், தைவான், இந்தோ-பசிபிக், பொருளாதார பிரச்சினைகள், செயற்கை நுண்ணறிவு, மருந்துகள் மற்றும் காலநிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர் என மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News