World News
ஜெருசலேம்: பாலஸ்தீன கைதிகளுக்கான ஆணையர் கதுரா ஃபேர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு கரையில் ஏராளமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் சிறைபிடித்துள்ளது. இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 39 பாலஸ்தீன கைதிகளும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இதற்கு பதிலாக, ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திய 240 பேரில்பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரை காசா-எகிப்து எல்லையில்ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்படைத்தனர். செஞ்சிலுவை சங்கத்திடம் பாலஸ்தீன கைதிகள் ஒப்படைக்கப் பட்ட பிறகு இஸ்ரேலிய கைதிகள் ஜெருசலேமுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்.
Comments
Post a Comment