World News
டெல் அவில்: காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 வயது சிறுவன் ஒருவர் தனது கால்களை இழந்ததுடன், தான் இழந்துவிட்ட பெற்றோரையும், குடும்ப உறுப்பினர்களையும் தேடி வருவது மனதை உலுக்கும் சம்பவமாக இருக்கிறது.
காசா பகுதியின் வடகிழக்கு மூலையில் உள்ள பெய்ட் ஹனௌன் (Beit Hanoun) நகரைச் சேர்ந்தவர் அஹ்மத் ஷபாத் (4 வயது). காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதலில் அஹ்மத் ஷபாத்தின் பெற்றோர் கொல்லப்பட்டனர். அதோடு இந்தச் சிறுவனின் 17 குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். அஹ்மத் ஷபாத்தின் இரண்டு வயது சகோதரர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். தற்போது இந்தச் சிறுவனை அவரின் மாமா அபு அம்ஷாதான் பாராமரித்து வருகிறார். பெய்ட் ஹனௌன் நகரில் போருக்கு முன்பு 52,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்தனர். ஆனால், தற்போது குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வாழ்ந்து வருகின்றனர்.
Comments
Post a Comment