World News
புதுடெல்லி: இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை கத்தார்அரசு கடந்த ஆண்டு கைது செய்து சிறையில்அடைத்தது. இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக நேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சகம், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்பது தொடர்பான சட்டப்பூர்வ வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment