World News

வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. இந்த சூழலில் இன்று இஸ்ரேலுக்கு செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 11-வது நாளாக நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தீவிர தாக்குதல்நடத்தின. இஸ்ரேலில் இருந்து ஏராளமானஏவுகணை குண்டுகளும் வீசப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்தனர். 1,200-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலரின் கூக்குரல் கேட்கிறது. ஆனால் மீட்க முடியவில்லை என்று தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News