World News
நியூயார்க்: மத்திய கிழக்கில் நிலைமை நேரத்துக்கு நேரம் மோசமாகி வருவதாக கூறிய ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போரில் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதல், அதனால் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவைகள் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமைக்கிழமை கூடியது. அதில் பேசிய ஐ.நா., பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறியதாவது: மத்திய கிழக்கில் நிலைமை ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மோசமடைந்து வருகிறது. பிரிவுகள் சமூகங்களைப் பிளவுபடுத்தி பதற்றத்தை தொடந்து கொதிப்படையச் செய்கின்றன. இதனால் போரின் போது பொதுமக்களின் பாதுகாப்புத் தொடங்கி கொள்கைகளில் உறுதியாக இருப்பது இன்றியமையாதது. இந்த மனிதத் தன்மையற்ற துன்பத்தை குறைப்பதற்கு, மனிதாபிமான உதவிகள் கெண்டு செல்வதை எளிதாக்க வேண்டும். பிணையக் கைதிகள் விடுதலை செய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
Comments
Post a Comment