World News
டெல் அவிவ்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுள்ளார்.
காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, அங்கு இருதரப்பு மோதல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 200 பேர் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு வேகமாக அதிரித்து வருகிறது. அங்கு இதுவரை 3,478 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் காசா சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
Comments
Post a Comment