World News
புதுடெல்லி: இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டான் மன்னரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அளவில் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்என்று வலியுறுத்தினார். இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்தித்து பேசினார். இஸ்ரேல் எல்லையில் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போரை அறிவித்து காசா பகுதிக்குள் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
Comments
Post a Comment