World News
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் 2 மூத்த கமாண்டர்கள் கொல்லப் பட்டனர்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று 8-வது நாளாக போர் நீடித்தது. ஹமாஸ் தீவிரவாதிகளின் வான்வழி தாக்குதல் பிரிவின் தளபதியாக முராத் அபு என்பவர் செயல்பட்டு வந்தார். அவர் காசா நகரில் உள்ள ஹமாஸ் முகாமில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அந்த முகாமை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் முராத் அபு உட்பட ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Comments
Post a Comment