World News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நெறிமுறை செய்வதற்கான உத்தரவு ஒன்றை திங்கட்கிழமை அன்று வெளியிட்டார். அமெரிக்க நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை அறிவித்தார். அப்போது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தனது டீப் ஃபேக் வீடியோவை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார்.

“ஏஐ சாதனங்கள் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படுகின்றன. அது சங்கடம் தருகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோவை கொண்டு டீப் ஃபேக் மூலமாக ஒருவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், மோசடி செய்யவும், போலி செய்திகளை பரப்பவும், குற்ற செயலில் ஈடுபடவும் செய்கின்றனர். ஒருவரின் மூன்று நொடி குரல் பதிவே இதற்கு போதும். அண்மையில் எனது டீப் ஃபேக் வீடியோவை நான் பார்த்தேன். ‘நான் எப்போது இதை சொன்னேன்’ என்று தான் அதை பார்த்ததும் நான் நினைத்தேன்” என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News