World News
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் 16வது நாளை எட்டியுள்ள நிலையில் காசாவாசிகளுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். காசாவாசிகள் வடக்கில் இருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் அனைவரையும் ஹமாஸ் ஆதரவு தீவிரவாதிகள் என்றே கருதுவோம் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிவிப்புகளை இஸ்ரேலியப் படைகளின் பெயர் மற்றும் முத்திரையுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் மூலம் காசா மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. காசாவாசிகளின் மொபைல் எண்களுக்கும் குறுந்தகவல், ஆடியோ மெசேஜ் வாயிலாக இத்தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment