World News
ஒட்டாவா: சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், "இந்தியாவைத் தூண்டிவிடவோ அல்லது பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. ஆனால் இந்தியா இதனை மிகத்தீவிரத்துடன் கையாள வேண்டும்" என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ முன்பு குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக தற்போது இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய ட்ரூடோ, "இந்த விவகாரத்தில் இந்தியாவை நாங்கள் தூண்டிவிடவோ அல்லது இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதற்கும் சரியான செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம்.
Comments
Post a Comment