World News
புதுடெல்லி: இந்திய உறவா அல்லது கனடா உறவா என முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தால், அமெரிக்கா இந்தியாவுக்குதான் ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்தார்.
கனடாவின் வான்கூவர் நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா நாட்டுஅதிபர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment