World News
வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விவகாரத்தில் அமெரிக்கா யாருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது பற்றி அந்நாட்டு ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி சொன்ன கருத்து கவனம் பெற்றுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு காரணமாக இந்தியா - கனடா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், அவருடைய கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. ‘யானையுடன் எறும்பு மோதுவது போல் இந்தியாவுடன் கனடா மோதுகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மைக்கேல் ரூபின் என்ற அந்த அதிகாரி, "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவைக் காட்டிலும் கனடாவுக்குத் தான் பெரிய ஆபத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தில் யாருக்கு ஆதரவு என்ற சூழலை அமெரிக்கா எதிர்கொண்டால், நிச்சயமாக இந்தியாவைத்தான் தேர்வு செய்யும். கனடாவைவிட இந்தியாவுடனான உறவையே அமெரிக்கா முக்கியமானதாகக் கருதுகிறது. இந்தியாவுடன் கனடா மோதுவது ஓர் எறும்பு யானையை எதிர்கொள்வதைப் போன்றதாகும்" என்றார்.
Comments
Post a Comment