World News

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அன்றைய தினமே அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றார். அன்றிரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தனர். இந்த விருந்தில் பைடனின் விருப்ப உணவான பாஸ்தா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசு தரப்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News