Sports in Tamil
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரையில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியை பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. இதில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையாக எழுந்துள்ளது. இந்த சூழலில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தெரிவு செய்யப்படாதது குறித்து இளம் வீரர் அபிமன்யு ஈஸ்வரன் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Comments
Post a Comment