Sports in Tamil
இந்திய அணியில் டாப் 6 பேட்டர்களில் ஒரே இடது கை வீரராக ரிஷப் பந்த் மட்டுமே இருந்தார். ஆனால் அவரும் காயம் காரணமாக இல்லாததால் இந்திய அணியில் இடது கை பேட்டர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ரிஷப் பந்த் அளவுக்கு இஷான் கிஷனின் பேட்டிங்கில் நம்பகத்தன்மை இல்லை. அவர் வங்கதேசத்திற்கு எதிராக அதிவேக அதிரடி இரட்டைச் சதம் விளாசியது அவர் மீது நம்பிக்கை ஏற்படுத்தினாலும் சீரான முறையில் அவர் ஆடுவதில்லை. இப்போது ரிங்கு சிங் பெயர் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அணிக்கு இடது கை பேட்டர்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. 2011 உலகக்கோப்பையில் கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என்று அணியில் லெஃப்ட் ஹேண்டர்கள் இருந்தனர். ஆகவே இடது கை வீரர்கள் அணியில் இருப்பது எதிரணியினருக்கு பெரிய சவால் என்பதில் மாற்று கருத்துகள் இல்லை. அதனால்தான் ரவி சாஸ்திரி மிகச்சரியாகவே இரண்டு இடது கை பேட்டர்கள் தேவை என்கிறார்.
Comments
Post a Comment