Sports in Tamil
சென்னை: கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நினைவுகளை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அவர் தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கடைசி பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
Comments
Post a Comment