Sports in Tamil

ஹராரே: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தகுதி சுற்றில் அமெரிக்க அணியை 304 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தது ஜிம்பாப்வே அணி. கிரிக்கெட் வரலாற்றில் இது 2-வது பெரிய வெற்றியாக அமைந்தது.

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஜிம்பாப்வே - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் அந்த அணி கடந்த 2009ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக 7 விக்கெட்கள் இழப்புக்கு 351 ரன்கள் குவித்திருந்தது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News