Sports in Tamil

லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றிக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை எனவும் இந்த தொடரை இங்கிலாந்து அணி கண்காட்சியாக மாற்றும் அபாயகட்டத்தில் இருப்பதாக முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் ஆதங்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் கீழ்ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடி வருகிறது. இவர்களது ஆட்டம்கிரிக்கெட் உலகில் ‘பாஸ்பால்’ என வர்ணிக்கப்படுகிறது. பாஸ்பால் பாணியில் அதிரடி வெற்றிகளை குவித்த இங்கிலாந்து அணி கடந்த வாரம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் ‘பாஸ்பால்’ புரட்சி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News