Sports in Tamil
பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
இந்த ஆட்டத்தின்போது இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கிற்கு, ரெஃப்ரீ பிரஜ்வால் சேத்ரி, ரெட்கார்டு வழங்கினார். முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பந்து ஆடுகள லைனுக்கு வெளியே வந்தது. அதை பாகிஸ்தான் அணியின் டிபன்டர் அப்துல்லா இக்பால், எடுத்து த்ரோ செய்ய முயன்றார். அப்போது லைனுக்கு வெளியே இருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், அப்துல்லா இக்பாலின் கைகளில் இருந்த பந்தை தட்டிவிட்டார்.
Comments
Post a Comment