World News
போர்ட் மோரஸ்பி: தெற்குலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமையை ஏற்று பின்தொடருவோம் என்று பபுவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவை ஒட்டி உள்ள நாடான பபுவா நியூ கினியாவுக்குச் சென்றுள்ளார். தலைநகர் போர்ட் மோரஸ்பி சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபி விமான நிலையம் வந்து வரவேற்றார். அப்போது, பிரதமர் மோடியின் காலைத் தொட்டு அவர் ஆசிர்வாதம் பெற்ற நிகழ்வு பரவலாகப் பேசப்பட்டது.
Comments
Post a Comment