Sports in Tamil

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2023 (TNPL) தொடரின் 7வது சீசன் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள டி.என்.சி.ஏ கிளப்பில் (TNCA Club) நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் டி.என்.பி.எல் சேர்மன் ஆனந்த், தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாரூக்கான் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் 7-வது சீசன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளது. ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் ஏழாவது சீசனில் மொத்தம் 32 போட்டிகள் 25 நாட்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News