Sports in Tamil
புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்ட விதத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி இந்தியாவுக்காக ஒலிம்பிக் மற்றும் உலக மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் மற்றும் பலர் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்தப் போராட்டம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment