Sports in Tamil
அகமதாபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்துள்ளது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 28) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழையின் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமறிங்கிய விருத்திமான் சாஹா 2-வது ஓவரில் அழகாக ஒரு கேட்ச் கொடுத்தார். ஆனால், தீபக் சாஹர் கையிலிருந்து நழுவிய அந்த பந்து சிஎஸ்கே ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு உள்ளானது. அடுத்து 4-வது ஓவரில் சாஹர் வீசிய பந்தில் நேரடியாக சாஹருக்கே சுப்மன் கில் ஒரு கேட்சை கொடுத்தார். அதிலும் கோட்டைவிட்டார் சாஹர். ஆனால், இம்முறை சிஎஸ்கே ரசிகர்களின் கோபம் பந்தின் மீதல்ல... சாஹரின் மீது.
Comments
Post a Comment