Sports in Tamil
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசன் பிளே-ஆஃப் சுற்றை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என நான்கு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பிளே-ஆஃப் சுற்றுக்கு அதிக முறை முன்னேறிய அணிகள் குறித்து பார்ப்போம்.
நடப்பு சீசனில் முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று மாலை விளையாடுகின்றன. எலிமினேட்டரில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் நாளை பலப்பரீட்சை செய்கின்றன. இந்த இரண்டு போட்டிகளும் சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
Comments
Post a Comment