Sports in Tamil
நடப்பு ஐபிஎல் சீசனில் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’. ஆனால், வழக்கம் போலவே இந்த முறையும் வெறுங்கையோடு வெளியேறி உள்ளது ஆர்சிபி. நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி, 7-ல் தோல்வி என முதல் சுற்றோடு நடையை கட்டி உள்ளது. இந்த சூழலில் அந்த அணி ஒரு முறை கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
2009, 2011 மற்றும் 2016 என மூன்று முறை கோப்பையை நெருங்கிய ஆர்சிபி அணியால் அதனை வெல்ல முடியவில்லை. இந்த மூன்று சீசனிலும் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. நடப்பு சீசனிலும் பிளே-ஆஃப் வாய்ப்பை கடைசி லீக் போட்டியில் இழந்த ஆர்சிபி வீரர்கள் கலங்கிய கண்களோடு விடைபெற்றனர். இறுதிப் போட்டி மட்டுமல்லாது 5 முறை அடுத்த சுற்றுக்கும் முன்னேறிய ஓர் அணி ஆர்சிபி.
Comments
Post a Comment