Sports in Tamil

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனில் 30-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. 135 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் அணி, லக்னோவை 128 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குஜராத்.

லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, சாஹாவுடன் இணைந்து 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். சாஹா, 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அபினவ், விஜய் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News