Sports in Tamil

ராவல்பிண்டியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 336 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி அனாயசமாக விரட்டி 337/3 என்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது பாகிஸ்தான் அணியின் 2-வது பெரிய வெற்றிகர சேஸிங் ஆகும். நியூஸிலாந்து அணி எடுத்த 336 ரன்கள் பாகிஸ்தான் மண்ணில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

நியூஸிலாந்தின் டேரல் மிட்செல் 119 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 129 ரன்கள் எடுத்தார். கேப்டன் டாம் லேதம் 85 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் 98 ரன்களை விளாசினார். சாத் போவ்ஸ் என்ற தொடக்க வீரர் 51 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 45.3 ஓவர்கள் வரை நின்ற டேரில் மிட்செல் முதலில் 53 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். பிறகு 102 பந்துகளில் சதம் கண்டார். அடுத்த 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தாலும் அவர் கொஞ்சம் முன்னமேயே அடித்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News