Sports in Tamil

தன் நாடே தன் மீது இவ்வளவு முதலீடு செய்யாது என்றும் ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர்கள் தன் மீது அவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள் என்றும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் கூறியுள்ளார்.

தன் சொந்த நாட்டு அணிக்கு ரஸல் ஆடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இருக்கும். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக 10வது சீசனாக தொடர்ந்து ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சில அணிகள் தங்கள் பெரிய ஸ்பான்சர் வீரர்களை விட்டு விடாது. சிஎஸ்கேவுக்கு எந்நாளும் தோனி, ஆர்சிபிக்கு எப்போதும் கோலி, மும்பைக்கு எத்தினமும் ரோஹித் சர்மா, அதே போல் சில அயல்நாட்டு வீரர்களும் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். அதில் டேவிட் வார்னர் குறிப்பிடத்தகுந்த வெளிநாட்டு வீரர். ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஆர்சிபிக்கு ஆடினார், ஷேன் வாட்சன், பிராவோ சிஎஸ்கேவுக்கு ஆடினர். பொலார்ட், மலிங்கா மும்பை இந்தியன்ஸின் ஐகான் வீரர்கள் என்று சொல்லலாம், அதேபோல்தான் ஆந்த்ரே ரஸலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு.

Comments

Popular posts from this blog

World News

World News

World News