Sports in Tamil
புதுடெல்லி: “எங்கள் போராட்டம் குறித்து ஏன் எந்த கிரிக்கெட் வீரரும் வாய் திறக்கவில்லை” என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த ஒட்டுமொத்த தேசமும் கிரிக்கெட்டை வழிபடுகிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து ஏன் எந்த கிரிக்கெட் வீரரும் இதுவரை வாய் திறக்கவில்லை. நீங்கள் இந்த விவகாரத்தில் எங்கள் தரப்புக்கு ஆதரவாக எதுவும் பேச வேண்டாம். குறைந்தபட்சம் நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ, அது குறித்து நடுநிலையிலாவது எதாவது பேசுங்கள். நீங்கள் பேசாமல் இருப்பதுதான் எனக்கு வலியைத் தருகிறது.
Comments
Post a Comment