Sports in Tamil
மும்பை: இலக்கை வெற்றிகரமாக விரட்டி பிடிக்கும் சேஸிங் கலையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடமிருந்து பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி மூன்று லீக் போட்டிகளில் இலக்கை விரட்டிய அணிகள் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளன. இந்த சூழலில் பீட்டர்சன் இதனை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணியும், குஜராத்துக்கு எதிராக மும்பை அணியும், டெல்லி அணிக்கு எதிராக ஹைதராபாத் அணியும் இலக்கை விரட்டிய போது அதனை வெற்றிகரமாக எட்ட முடியாமல் ஆட்டத்தில் தோல்வியை தழுவின. நேற்று ஆர்சிபி அணியால் 201 ரன்கள் என்ற இலக்கை பெங்களூரு மைதானத்தில் எட்ட முடியவில்லை.
Comments
Post a Comment