Sports in Tamil

ராவல்பிண்டியில் நேற்று இரவு நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியது. நியூஸிலாந்து அணிக்கு ஆடிவரும் ஹாங்காங்கில் பிறந்தவரான மார்க் சின்க்ளைர் சாப்மேன் என்ற இடது கை வீரர் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 104 ரன்களை விளாசி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என்ற இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றார். இது சாப்மேனுடைய முதல் டி20 சதமாகும்.

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டாம் லேதம் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் மீண்டும் தான் யார் என்று நிரூபித்து 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 98 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ, இப்திகார் (22 பந்து 36 ரன்), இமாத் வாசிம் (14 பந்தில் 31 ரன்) கடைசியில் விளாச பாகிஸ்தான் 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி ஷாஹின் ஷா அஃப்ரீடி, இமாத் வாசிம் பந்து வீச்சில் 9.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் என்று முடங்கியது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News