Sports in Tamil
டெல்லி: தனக்கு ஒரு வேலை வேண்டி சுமார் 8 மாத காலமாக 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் விண்ணப்பித்து இறுதியில் அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார் டெல்லியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர். அவர் பெயர் ஃபர்ஹான் என தெரியவந்துள்ளது. இந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
“கடந்த 2022 ஜூலையில் வேலை தேடும் படலத்தை தொடங்கினேன். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் விண்ணப்பித்தேன். அதில் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நான் கல்லூரியை முடித்து வெளிவந்த போது வேலை தேடி பெற்றதற்கும், இப்போதும் நிறைய சவால் இருப்பதை கண்டேன். தொழில்நுட்ப துறையில் வேலை பெறுவது மிகவும் சவாலாக உள்ளது. ஒருபுறம் பணி நீக்கம் நடைபெற்று வரும் காலம் இது.
Comments
Post a Comment