World News
இஸ்லாமாபாத்: ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியான பஷிர் அகமது பிர் எனும் இம்தியாஸ் ஆலம் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்தவர் இம்தியாஸ் ஆலம். ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதிலும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கச் செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்குள் பிற பயங்கரவாத அமைப்புகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும் ஒங்கிணைப்புப் பணிகளை அவர் மேற்கொண்டு வந்துள்ளார். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனுக்கு மிகவும் நம்பிக்கையான தளபதியாக இருந்து வந்துள்ளார்.
Comments
Post a Comment